சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.
ஓம் றீங் சரஹணபவ
- ச (Sa) - சகல ஜன வசீகரணம் (எல்லோரையும் வசீகரிக்கும் தன்மை).
- ர (Ra) - செல்வத்தை அழைத்து வருதல்.
- ஹ (Ha) - பகை, பிணி, நோய் தீர்க்கும் சக்தி.
- ண (Na) - பகைவரை அழிக்கும் ஆற்றல்.
- ப (Bha) - எல்லாவற்றையும் மோகிக்கும் தன்மை.
- வ (Va) - எல்லோரையும் ஸ்தம்பிக்க வைக்கும் (நிறுத்திவைக்கும்) சக்தி.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.