Wednesday, January 8, 2025

OM SIREENG REENG MAGA MASIMASI NASIMASI RUDHRAYA SWAGA


 அகத்தியர் அருளிய சகல நோய்களை நீக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்.

காயத்ரி மந்திரம் பற்றிய பாடல்:

சுழிவான மந்திரமாஞ் சூச்சந்தன்னை
செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய்கேளு
காரப்பா பிரமகாயத்திரியென்று
கருணைவளர் விஷ்ணுகாயத்திரியொன்று
நேரப்பா ருத்திர காயத்திரியொன்று
நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
சாரப்பா ருத்திர காயத்ரியோத
சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.

ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
சதங்கையுடன் பிரம காயத்திரியோத
ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்
உண்மையுடன் அஷ்டாங்க சித்தியாகும்
நாமப்பா சொன்ன காயத்ரி மூன்றும்
நாதாந்த நயனமடா சத்தியமாமே.

அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்”

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.


ருத்ர காயத்ரி மந்திரம்

 "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" 

"OM SIREENG REENG MAGA MASIMASI NASIMASI RUDHRAYA SWAGA"

ருத்திர காயத்ரி மந்திரத்தை செபிப்பவர்கள் அனைத்து நோய்களும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்தியர். 

காயத்ரி மந்திரங்களை செபிக்கும் முறை:

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக 
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே


--------------------------------------------------------------------------------------------------

நோய்கள் தீருவதற்கு அகத்தியர் அளித்த ஒரு வரி மந்திரம்
1008 times



100 times 

-----------------------------------------------------------------------------------------------------

சித்தர்களை காண மந்திரம் : ஓம் கிலீம் சிவாய நம. சிவாய நம ஓம் கிலீம்

சிவாய நம ஓம் கிலீம் என்பது ஒரு மந்திரம், இது சிவபெருமானை வணங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மந்திரத்தில்:

சிவாய நம - இது "சிவனுக்கு நமஸ்காரம்" என்று பொருள்படும், அதாவது சிவபெருமானுக்கு மரியாதை செலுத்துவது.

ஓம் - இது உபநிஷத்களில் குறிப்பிடப்பட்ட ஒரு பரம்பொருள் மந்திரம், அனைத்து சக்திகளின் ஆதி ஒலியாகக் கருதப்படுகிறது.

கிலீம் - இது ஒரு பீஜ மந்திரம், இது வளர்ச்சி, பாசம், மற்றும் மனப்பூர்வமான சக்திகளுடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், சிவனின் ஆசீர்வாதத்தையும், உள்ளுணர்வு, வளர்ச்சி, மற்றும் பிரபஞ்ச சக்திகளுடன் இணைப்பையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. 

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.